வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் … உரிமையாளரை குத்திக்கொலை செய்த இளைஞர்..!

Published by
பால முருகன்

புதுச்சேரியில் வீட்டு வாடகை கேட்டதால் உரிமையாளரை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பாக்குமுடையான்பேட் ஜீவா காலனியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரியில்  சொந்தமாக கட்டிடத்தில் 5 வீடுகளை வைத்துள்ளார் அதில் ஒருவீட்டில் வசித்து வந்தார் மற்ற நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டார், மேலும் ஒரு வாடகை வீட்டில் அருண்குமார் என்பவர் வசித்து வந்தார், அருண்குமார் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்திவருகிறார்.

இந்த நிலையில் அருண்குமார் வீட்டுவாடகையை கடந்த சில மதங்களாகவே கொடுக்காமல் வந்துள்ளார், இதனால் அருணிற்கும் வீட்டின் உரிமையாளர் புருஷோத்தமனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் புருஷோத்தமன் நேற்று இரவு வீட்டு வாடகை வாங்குவதற்கு அருண்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது திடீரென வாய்தகராறு கை சண்டையாக மாறியது, இதனால் கோபமடைந்த அருண்குமார் வேகமாக வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து வீட்டின் உரிமையாளர் புருஷோத்தமனை குத்தியுள்ளார், இதனால் புருஷோத்தமன் துடிதுடிக்க கீழே விழுந்துள்ளார், புருஷோத்தமன் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கோரிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த புருஷோத்தமனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலிலே உயிரிழந்தார், மேலும் இது தொடர்பாக அருண்குமாரை காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

11 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

12 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

12 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

13 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

13 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

14 hours ago