“தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்திற்காக சிந்தித்தவர் அரியலூர் அனிதா!”- மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published by
Surya

தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக செலுத்திய சமூகநீதிப் போராளி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்றாலே இந்தியா முழுவதும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மாணவி அனிதா உயிரிழந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவரின் நினைவஞ்சலியாக, “தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்திற்காக சிந்தித்தவர் அரியலூர் அனிதா” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக செலுத்திய சமூகநீதிப் போராளி என தெரிவித்தார். மேலும், நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள், பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருவது கூறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

2 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

34 minutes ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

38 minutes ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

2 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago