அண்ணாமலை தான் காரணம்..! எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு!

Published by
அகில் R

எஸ்.பி.வேலுமணி: நடந்து முடிந்த இந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக 3-வது இடத்தில் வகித்து தோல்வியையும் தழுவியது. தற்போது, அதிமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசிய போது,”அரசியல் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான், ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டார். வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு 2 ஆம் கட்ட அதிமுக தலைவர்கள் தான் அதிகமாக பேசினார்கள் என்று கூறுவது சரியல்ல.

இதற்கு முன் பாஜக கூட்டணி இருந்த போது தமிழிசை மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. அண்ணாமலை வந்த பிறகு தான் அண்ணா, ஜெயலலிதா, ஆகியோர் குறித்தும் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசி இருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான். அதே கூட்டணி இந்த தேர்தலில் தொடர்ந்திருந்தால் 30 முதல் 35 சீட்கள் வரையாவது கிடைத்திருக்கும்” என்று அவர் காட்டமாக பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago