கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இதையடுத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் என்பதால் மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு எப்படி இருக்கும்..? பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா..? போன்ற பல்வேறு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் இருக்கும். இந்தாண்டு பொதுத்தேர்வு பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பது போன்று எளிமையான வகையில் வினாத்தாள் இருக்கும்.
பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…