சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில், பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது.
அதனைதொடர்ந்து, B.E/B.Tech மாணவர்களின் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் இந்தியத்தளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நடைபெறும் எனவும், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர, ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, மாணவர்கள் www.unom.ac.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள மாணவர்கள், உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…