சிறையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 2012 தொடங்கி இன்று வரை சிறைக்கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 260 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு எந்த முறையான விசாரணையும் இல்லை. பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றம் செல்ல திமுக தயாராக உள்ளது.அதிமுக ஆட்சியில் சிறையில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை .கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட போலீசாரால் தாக்கப்பட்டு இறப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…