செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு..?

Published by
murugan

செங்கோட்டையில் பிரதமர் கொடியை ஏற்றும் போது வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நாளை சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா போதுதான் இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான போர் விமானங்கள், இராணுவத்திற்கு சொந்தமான டாங்குகள் அணிவகுத்து செல்வார்கள்.

சுதந்திர தின விழாவை பொறுத்தவரை பிரதமர் மோடி உரையாற்றுவார், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் இந்த முறை இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும்போது வானில் இருந்தபடி மலர்களை தூவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த சுதந்திர தின விழாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பட்டு செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Published by
murugan

Recent Posts

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

3 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

3 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

5 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

6 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

6 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

7 hours ago