தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கவுதமனுக்கு லதா என்ற மனைவியும், சார் முகிலன் மற்றும் சார் சித்தார்த்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ஒரு மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர் மருத்துவ செலவிற்காக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என்று நினைப்பதாகவும், அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவரது மனைவியும் மகன்களும் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் மட்டும் பணி செய்யும் படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் கௌதமன் பணியில் இருந்தபோது கடன் கொடுத்தவர் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் கௌதமன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…