சாகும் நேரத்தில் சங்கரா…சங்கரா… என்பது போல ஆட்சி முடியும் தருவாயில் திட்டங்களை முதல்வர் அறிவிக்கிறார் – மு.க.ஸ்டாலின்..!

Published by
murugan

அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலை சீரழிந்து விட்டது. ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு முறையாக வழங்கியதா..? என மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன், உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, உங்கள் வரவேற்பையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது நமது வெற்றி நன்றாக தெரிகிறது.

ஜெயலிதா மறைந்து சசிகலா சிறைக்கு சென்றதால் தான் பழனிச்சாமி முதல்வரானார். வர்தா புயலின் போது தமிழகம் கேட்டது 22,000 கோடி, ஆனால் மத்திய அரசு கொடுத்தது 22 கோடி என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கென தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். சாகும் நேரத்தில் சங்கரா…சங்கரா… என்பது போல ஆட்சி முடியும் தருவாயில் திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.

அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலை சீரழிந்து விட்டது. ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு முறையாக வழங்கியதா..? என கேள்வி எழுப்பினார். கொரோனா பேரிடர் நிதியைக்கூட முழுமையாக வழங்கவில்லை மத்திய பாஜக அரசு என தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கொள்ளைக் கூட்டத்தை கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைக்கிறது பாஜக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் நவீன  மயமாக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லைசத்யா,செய்யூர் தொகுதி வேட்பாளர் பனையூர்பாபுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

Published by
murugan

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

41 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

1 hour ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago