புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – கனிமொழி!

Published by
Rebekal

புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியினை புகுத்த நினைப்பதாகவும் இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியில் தான் கடிதங்கள் கூட அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழும்புகிறது. தொடர்ந்து மத்திய அரசு மக்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது எனக் கூறியுள்ளார்.

மக்களின் நிலையை புரிந்து கொள்ளாத மத்திய அரசால் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் கூட குறுந்தகவல்கள் இந்தியில் வருவதினை பார்க்க முடிகிறது. மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை  புகுத்துவதை தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் நடந்த பாலியல் சம்பவம் கூட அரசாங்கத்தால் மூடி மறைக்கத்தான் படுகிறதே தவிர குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

32 minutes ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

45 minutes ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

2 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

2 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

3 hours ago