புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியினை புகுத்த நினைப்பதாகவும் இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியில் தான் கடிதங்கள் கூட அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழும்புகிறது. தொடர்ந்து மத்திய அரசு மக்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது எனக் கூறியுள்ளார்.
மக்களின் நிலையை புரிந்து கொள்ளாத மத்திய அரசால் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் கூட குறுந்தகவல்கள் இந்தியில் வருவதினை பார்க்க முடிகிறது. மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதை தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் நடந்த பாலியல் சம்பவம் கூட அரசாங்கத்தால் மூடி மறைக்கத்தான் படுகிறதே தவிர குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…