திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.1 நாணயத்தை இந்த எந்திரத்தில் செலுத்தினால் ஒரு முககவசம் கிடைக்கும். இதுபோன்று தூத்துக்குடியில், ரூ.5-க்கு முககவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, “அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.1 நாணயத்தை செலுத்தி ஒரு முககவசத்தை பெறும் தானியங்கி எந்திரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான முககவசத்தை ரூ.1-க்கு வழங்குகிறோம். இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற முககவச தானியங்கி எந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…