இன்று அதிகாலை புத்தமத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி தரவேண்டும் என முன்னதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்து இருந்தார். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை  நேற்று நீதிபதி பவானி சுப்பராயன் விசாரணை மேற்கொண்டு, கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் அடக்கம் செய்துகொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் , வேண்டுமென்றால் கட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அனுமதி பெற்று நினைவிடம் அமைத்துக்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் .

இதனை அடுத்து செம்பியம், பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உடலானது நேற்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. சுமார் 20 கிமீ தூரம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பின்னர் இன்று (ஜூலை 8) அதிகாலை 1 மணியளவில் பொத்தூரில்  உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலானது புத்தமத முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

16 minutes ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

57 minutes ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

2 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

3 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

6 hours ago