ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஈரோடு ரயில்நிலையத்திற்கு வந்த குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் முரண்பாடாக தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சூரம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் வங்காளதேசம் டாக்காவைச் சேர்ந்த உஜ்ஜல்குமார் டட்டா என்பதும், அவர் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டைகள் ஏதுமின்றி, மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குர்லா விரைவு ரயில் மூலமாக ஈரோட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…