சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ராஜேந்திரன் என்பவர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்த பின்னர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டு ராஜேந்திரனிடம் மாற்றிக் கொடுத்துவிட்டு அந்த நபர் தப்பி சென்று விட்டார்.
இது தெரியாமல் இருந்த முதியவர் ராஜேந்திரன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வங்கி கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி வந்துள்ளது, இதை பார்த்து ராஜேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து 4 நாட்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1.13 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. பின்னர் உடனே அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் பணம் எடுத்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…