ஜாக்கிரதை.! ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிடுபவர்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்.! சைபர் கிரைமுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்ட அவரை, கைது செய்யப்பட்டது.
  • இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பதவி வகிப்பவர்கள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இவ்வாறு சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை தயார் செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மருத்தாசலம் தரப்பில் நீதிபதி குறித்து ஆபாச கருத்து பதிவிட்டதற்காக மன்னிப்பு கடிதம் அளித்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் காவல்துறை அளித்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, அதில் திருப்தி இல்லை என்று தெரிவித்து. இதுபோல் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக எந்த மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, 29-ம் தேதிக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

10 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

10 hours ago