அராஜகத்திற்கு நாங்கள் ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என்று கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது.
சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது ஆனால் ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்
விடுதலைச் சிறுத்தைகள் கோழைகள்.நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம் இது உங்களுடைய தோல்வி நாங்கள் தலைவணங்க மாட்டோம் பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார்.
ஆனால் விசிக பெண்களை மதிப்பதையே அநியமாக கருதுகிறது. பெண்களின் மரியாதைக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம் சிலரின் அராஜகங்கலுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.
இந்த மண்ணின் ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…