திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியல் சார் ஆட்சியரிடம் சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா, அமமுக சார்பில் கலாராணி ஆகியோரும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதனிடையே, கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் எல் முருகன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பிறகு, தற்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுபோன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடும் நிலையில், நேற்று திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…