நல்லாட்சியை வழங்கக்கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிலும், குறிப்பாக 2 பொதுதொகுதி, 2 தனி தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் , கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஸ்டாலின் ஈட்டியிருக்கிறார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே லட்சியம் என கூறியிருக்கிறார்.
நல்லாட்சியை வழங்கக்கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா என தெரிவித்தார். நல்லாட்சியை வழங்க ஸ்டாலினுக்கு விசிக முழு ஒத்துழைப்பு வழங்கும். தொடர்ந்து பேசிய அவர் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி.
தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். மேற்குவங்கத்தை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது என கூறினார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…