தொகுதி பங்கீடு இழுபறி…நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை..!

Published by
murugan

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 5 நாள்களே உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சியினர் விருப்பமனு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் நேர்காணல், தொகுதி பங்கீடு போற்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தொகுதி பங்கீட்டில் அதிமுகவில் உள்ள தேமுதிக உடன் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 தொகுதிகளுகும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, தேமுதிக இடையே 5 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 கட்ட பேச்சுவார்த்தை இறுதி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. பின்னர், 4 -ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 23 தொகுதிகள் கேட்டு வந்த தேமுதிக  18 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தததாக கூறப்பட்டது.

அதிமுக சார்பில் 16 முதல் 17 தொகுதி மற்றும் ஒரு எம்.பி சீட் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக உடனான தொகுதிப்பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், நாளை மாவட்ட செயலாளர்களின் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. தேமுதிக நிர்வாகிகளிடம் கருத்து  கேட்ட பின்னர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

25 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

57 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago