விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது பணத்தை திருப்பி தர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நீலையில், நிவாரண தொகையை நீதிமன்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தலைமை செயலக களனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே, விசாரணை கைதி சந்தேக மரணம் தொடர்பாக விக்னேஷின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு எந்த விஷயமும் பேச கூடாது என்று தெரிவித்தாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், விக்னேஷின் குடும்பபத்தினர், காவல்துறை கொடுத்த நிவாரண தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 18-ஆம் தேதி புரசைவாக்கதில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரை காவல்துறை கையது செய்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் ஆட்டோ ஓட்டுனரையும் அடையாளம் கண்டனர். இந்த வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 3 பொலிஸாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…