#Breaking:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – முப்படைத் தளபதியின் நிலை என்ன?,விசாரிக்க உத்தரவு!

Published by
Edison

நீலகிரி:குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிஹாப்டர் விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை(IAF) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருந்துள்ளனர் என்றும்,குறிப்பாக,முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட  14 பேர் பயணம் செய்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கூறப்படுகிறது.

 

இதனையடுத்து,மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, நான்கு உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் யார் என்பது அடையாளம் காணமுடியாத அளவுக்கு உள்ளதாகவும்,விபத்தில் சிக்கியவர்களில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனினும்,முப்படைத் தளபதியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

IAF Mi-17V5IAF Mi-17V5

இந்நிலையில்,விபத்துகுள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் இருந்ததாகவும்,விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை(IAF) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக IAF தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,டெல்லியில் இருந்து சூலூருக்கு  பயணித்தவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.அதில்,முப்படைத்தளபதி பிபின் ராவத்,மதுலிகா ராவத் எல்.எஸ்.லிடர்,ஹர்ஜிந்தர் சிங் ,ஜிதேந்திர குமார் ,விவேக் குமார்,சாய் தேஜா ,ஹாவ் சாட்பால்,குருசேவாக் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஹெலிஹாப்டர் விபத்து தொடர்பாக தற்போது பிரதமருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதன்பின்னர்,அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு மருத்துவ குழு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வமான விவரங்கள் பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

6 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

6 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

7 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

8 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

8 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

9 hours ago