#BREAKING: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரிக்கு கொரோனா .!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை நடத்த சில அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறையில் இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேர்வுத்துறையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரியில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இதனால், தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.