#Breaking: தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று 83 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,66,687 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,788 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 716 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 716 பேரில் ஆண்கள் 427 பேர், பெண்கள் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, கொரோனா வார்டில் 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 36, செங்கல்பட்டில் 35, பெரம்பலூர் மற்றும் திருவள்ளூரில் தலா 27 என கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 8,718 பேரில் 5,848 பேர் ஆண்களும், 2,867 பேர் பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump