#BREAKING : தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு…! துரைமுருகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு…! – உயர்நீதிமன்றம்

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க சேனை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார் என்பவரின் வெற்றியை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.6-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025