கோவை மாவட்டம் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம்.
கோவை மாவட்டம் ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித்சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ததாக தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவை மாவட்டம் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கோயம்பத்தூரில் 365 புகார்களில், 284 புகார்கள் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…