தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 8,86,673 பேர் இதுவரை பாதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 2,000க்கு மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 8,86,673 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 1,527 இன்று குடமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 8,58,075 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 12,719 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று 83,713 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில், தற்போது 15,879 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…