பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஊரடங்கு 15ம் தேதியுடன் முடியும் நிலையில், ஊரடங்கு நீடிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்தும் முடிவு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…