#Breaking: தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 6000-ஐ தாண்டியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மேலும் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 6000-ஐ தண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 5409 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6009 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 399 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3043 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இருவர் சென்னையை சேர்ந்தவர்கள், ஒருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று 58 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1605 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் 13,980 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 600 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இந்த 600 பேரில் ஆண்கள் 405 பேர், பெண்கள் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகவும் குறைவாக இறப்பு விகிதம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கொரோனா வார்டில் 4,361 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

14 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

3 hours ago