#Breaking:1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு…!

கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி,
- 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு.
- 3 முதல் 4 ஆம் வகுப்பு வரை – 49% பாடங்கள் குறைப்பு.
- 5 ஆம் வகுப்புக்கு – 48% பாடங்கள் குறைப்பு.
- 6 ஆம் வகுப்புக்கு – 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு
- 7,8-ம் வகுப்பு வரை 40% – 50% பாடங்கள் குறைப்பு.
- 9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.
- 10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.
- 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.