#BREAKING : விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது – நீதிபதி வேதனை

Default Image

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு. 

சென்னை  உயர்நீதிமன்றத்தில், மரம் விழுந்து இருவரு  பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு  தரப்பில், ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி  கூறுகையில்,இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.1 லட்சம் எனவும் இழப்பீடு வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies