டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் இந்த திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் திமுக தலைவர்களை முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளனர்.
மேலும், இந்த விழாவில் தமிழக முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு மாநில கட்சியாக இருந்து திமுகவும் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில், இந்நிகழ்ச்சி தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படும்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…