காவலர் தேர்வு நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு 8,888 பணியிடங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டது.எனவே 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,ஒவ்வொரு தேர்விலும் முறைகேடு என்றால் தேர்வு அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையே தகர்ந்துவிட்டது. தமிழ் மண்ணில் பிறந்தது பெருமை, அதேநேரம், இதுபோன்ற நேர்மையின்மையால் வேதனை அளிக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஒரு மையத்தில் இதே முறையில் முறைகேடு என்றால், காவல்துறை தேர்விலேயும் இப்படியா?இப்படிப்பட்டவர்கள் காவல்துறை பணியில் சேர்ந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் 8,888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்தார்.மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு ,டிஜிபி ,தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…