#breaking: கோடநாடு வழக்கு – அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடநாடு வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, கோடநாடு வழக்கு இன்று மீண்டு உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விசாரணை முடிந்து, செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த விசாரணையின் போது, புலன் விசாரணை நடைபெறுவதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்படியிருந்தது. அதன்படி புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த விசாரணையில் புலன் விசாரணையை தொடரலாம் என்றும் காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். அதன்படி, மேல் புலன் விசாரணை தொடங்கி உள்ளது. அதனால் இன்று நடைபெற்ற விசாரணையில், புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது என கூறினார்.

சம்பவ நடந்த நாளன்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், விசாரணை அதிகாரிக்கு சம்பவம் குறித்து தெரிவதற்கு முன் தடயவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு சென்றது முரணானது எனவும் தெரிவித்தார். கோடநாடு வழக்கில் பல விஷயங்கள் மர்மமாக உள்ளதால், முழுமையான புலன் விசாரணை செய்யவேண்டி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

3 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

44 minutes ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

1 hour ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

2 hours ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

4 hours ago