தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என பள்ளிக்கல்வித்துறை தகவல்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒரு அரசு பள்ளி மாணவர்கள் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்து.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…