#BREAKING: வரும் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

வருகிற 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தொற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 26ம் தேதி (திங்கட்கிழமை) முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள்: 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் முதல் அமல் – முழு விபரம்:

  • திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை.
  • பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.
  • சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி.
  • அனைத்து வழிபாட்டு தளங்களிலும், வழிபட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.
  • உணவகங்கள் மற்றும் டீ கடையில் பார்சல் மட்டுமே அனுமதி.
  • வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் மற்றும் கப்பல் பயணிகள் இ-பாஸ் காட்ட வேண்டும்.
  • தனியார் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.
  • இறுதி ஊர்வலங்களில் பங்கேற்க அளிக்கப்பட்ட அனுமதி 50 லிருந்து 25ஆக குறைப்பு.
  • திருமணம் மற்றும் திருமண சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த அனுமதி 50ஆக குறைப்பு.
  • தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

8 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

9 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

10 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

11 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

14 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

15 hours ago