தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் சார்பில் மார்ச் 29-ம் தேதிக்குள் அந்த பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி தொகுதிவாரியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை அரசியல் கட்சியினருக்கு தராமல் 5 மாவட்டங்களில் நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால், தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என கூறி தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…