#BREAKING: தபால் வாக்கு அளிப்போர் பட்டியல் -திமுக முறையீடு..!

Published by
murugan

தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு  தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் சார்பில் மார்ச் 29-ம் தேதிக்குள் அந்த பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி தொகுதிவாரியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை அரசியல் கட்சியினருக்கு தராமல் 5 மாவட்டங்களில் நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி  தொடங்கியுள்ளது. இதனால், தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என கூறி தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
murugan

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

44 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago