#BREAKING : ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Published by
murugan
  • பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
  • ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன், அப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கடந்த மே 24-ஆம் தேதி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், போலீசார் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Published by
murugan
Tags: PSBB

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

9 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

10 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

11 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

12 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

12 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

13 hours ago