#BREAKING: தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஆலைக்கு முழுமையாகச் சீல் வைக்கப்படும் – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக தேவைக்கேற்ப ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவையின் அளவை புரிந்து மத்திய அரசே வழங்கும் எனவும் தெரிவித்திருந்தது.

ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜன் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பங்கீடு பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் நேரத்தில் தமிழகத்துக்கு எந்த வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. திமுக ஆட்சி அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை அளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

26 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

3 hours ago