தடையை மீறி வேல் யாத்திரையை நடத்திய எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த போலீசார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற இருந்த நிலையில், தமிழக அரசு நேற்று இந்த யாத்திரையை நடத்த அனுமதி மறுத்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டார். இவர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, திருத்தணியில் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து, பேருந்தில் அழைத்து சென்றனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…