#BREAKING: வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் தனி வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜெயரஞ்சன் எழுதிய Dravidian journey புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சேமநல நிதி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா தோற்றால் உயிரிழந்த 480 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

6 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

34 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago