ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Default Image

ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் ஆதார் விபரம் இல்லாத காரணத்தால், சிறுவனை கண்டறிய முடியவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆதார் விபரங்களை தனி நபர்களுக்குத்தான் வழங்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts