எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..!

Default Image

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பழனிசாமி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பழனிசாமி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்