அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவாக வாதிட கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்காக வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…