முந்திரி கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகனை தொடர்ந்து மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேரை கடந்த நவம்பர் 27-ஆம் போலீசார் கைது செய்தனர். முந்திரி கடத்தல் வழக்கில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜகுமாரன், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையில், லாரியுடன் ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் கைதான மாரிமுத்து, செந்தில் முருகன், ராஜகுமாரன், விஷ்ணுபெருமாள் ஆகியோர் மெது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை தொடர்ந்து மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…