முந்திரி கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகனை தொடர்ந்து மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேரை கடந்த நவம்பர் 27-ஆம் போலீசார் கைது செய்தனர். முந்திரி கடத்தல் வழக்கில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜகுமாரன், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையில், லாரியுடன் ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் கைதான மாரிமுத்து, செந்தில் முருகன், ராஜகுமாரன், விஷ்ணுபெருமாள் ஆகியோர் மெது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை தொடர்ந்து மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…