Kaveri River [File Image]
கர்நாடகாவில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் காவேரி நீரை தமிழகத்திற்கு திறக்க சொல்லி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு, காவேரி ஒழுங்காற்று வாரியம் , காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம், மத்திய அரசு என பல்வேறு வகையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அந்தந்த மாத கணக்கீட்டின் படி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை விட குறைவான அளவிலேயே தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து வருகிறது. இதனை குறிப்பிட்டு தமிழக அரசு, தமிழகத்திற்கு தேவையான குறைந்தபட்ச அளவிலான தண்ணீரையாவது திறந்துவிட கோரி வலியுறுத்தி வருகிறது.
இன்று டெல்லில் காவேரி ஒழுங்கற்று மையம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் தமிழக விவசாயத்திற்கு தேவையான குறைந்தபட்ச அளவிலான தண்ணீரை திறக்க வலியுறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி குறைந்தபட்ச அளவிலான தாண்ணீர் தான் திறக்கப்படுகிறது என இந்த கூட்டத்தில் குறிப்பிடபட்டது.
இதனை அடுத்து, கர்நாடக அரசனது, காவேரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என காவேரி ஒழுங்கற்று வாரியம் பரிந்துரை செய்துள்ளது . இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்காவிடில் தமிழக அரசு அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிடும் . காவேரி ஒழுங்காற்று மையமானது பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். உத்தரவுகளை வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…