மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி.! மத்திய அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இரு புயல்கள் தாக்கின. அதில் முதலாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதே போல, டிசம்பர் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்திலும் வெள்ளத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

டிசம்பர் மாத கனமழையால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதை அடுத்து புயல் வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு போதிய அளவு நிவாரண நிதியை கேட்டு இருந்தது. அப்போது, மத்திய அரசு குழு தமிழகம் வந்து வெள்ளத்தால் பாதிப்பப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்கப்ட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நிவாரண தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை என்றும், வழக்கமாக ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு அளிக்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சிறிய தொகையை மட்டுமே மத்திய அரசு அளித்ததாகவும் தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சமயத்தில், தற்போது மிக்ஜாம் புயல் மற்றும் தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு என தனியே நிவாரண தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு 285.54 கோடி ரூபாயும், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 397.13 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிதி தமிழகத்திற்கு என 406.57 கோடி ரூபாயும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் முதற்கட்டமாக, மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு 115.49 கோடி ரூபாய் அளிக்கவும், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 160.61 கோடி ரூபாய் என மொத்தமாக 276 கோடி ருபாய் தற்போது உடனடியாக அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதே போல , கார்நாடகாவில் ஏற்பட்ட வறட்சிக்கு நிவாரணமாக 3,498 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 44 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் அளித்து, முதற்கட்டமாக கர்நாடகாவுக்கு 3,454 கோடி ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.

கர்நாடகாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் , வரும் மே மாதம் 7ஆம் தேதி மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், மாநில எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago