தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு எனவும் கேரளா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒன்பது கிலோமீட்டர் வேகத்திற்கு நிலவும் வலிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்காலில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை பெய்யும். வருகின்ற 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…