தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு எனவும் கேரளா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒன்பது கிலோமீட்டர் வேகத்திற்கு நிலவும் வலிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்காலில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை பெய்யும். வருகின்ற 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…