செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம் ரத்து! – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதலாக வழங்கல்.

செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதுபோன்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜின் இடமாற்றமும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலர் அறிவித்துள்ளார். மேலும், நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் தொல்லியல் துறை ஆணையர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக கமல் கிஷோரும், ஆவின் மேலாண் இயக்குநராக வினீத்தும் நியமனம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதே சமயத்தில், ஏற்கனவே இருந்த ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், தற்போது கூட்டுறவு சங்களின் பதிவாளர் பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதில், ராகுல்நாத்திற்கு பதிலாக கமல்கிஷோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆர்.ராகுல் நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவ்உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

18 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

41 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago