வந்தாரை வாழவைக்கும் சென்னை! அதன் உண்மையான பெயர்தான் என்ன?!

Published by
மணிகண்டன்

வந்தாரை வாழவைக்கும் சென்னை என தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களில் சென்னையை நன்கு அறிந்தவர்கள்  கூட சொல்லி விடுவார்கள். அவ்வளவு வேகமாக இயங்கி வருகிறது சென்னை.

இவ்வளவு பெருமை மிக்க சென்னையை தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலானோர் மெட்ராஸ் என்று தான் அழைத்து வருகின்றனர்.  தமிழ்நாட்டை தாண்டி வடமாநிலங்களுக்கு நாம் செல்கையில் அவர்கள் தமிழர்களை மதராஸி எனவே தற்போது வரை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு சென்னை நம் வாழ்வில் ஓர் அங்கம் வகிக்கிறது.

 

சென்னை என்ற பெயர் 1996இல் வைக்க பட்டாலும், மெட்ராஸ் என்கிற பெயர் எப்படி வந்தது என ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் பார்ப்போம். அந்த பிளாஸ்பேக்கில் இரண்டு கதைகள் உள்ளன

அதில் முதலாவதாக கூறப்படுவது, சென்னையில் முதலில் மீனவர்களும், கத்தோலிக்க பாதிரியார்களும் இருந்து வந்த காலகட்டம் அது. அப்போது கத்தோலிக்க மக்களின் தலையாரி என அழைக்கப்படுபவரின் மகன் பெயர் மதராசன். இதனால் தான் வசிக்கும் ஊரின் பெயருக்கு தனது மகனின் பெயரை வைக்க எண்ணி மதராசபட்டினம் என வைத்ததாக ஒரு கூற்றும்,

இன்னொர் கதையாக , தற்போதைய சாந்த்தோம் பகுதியில் போர்ச்சுக்காரர்கள் வசித்து வந்தனர். அங்கு ஓர் செல்வாக்கு மிக்க அழகிய பெண் வசித்து வந்தார் அவள் பெயர் மாத்ரா. இவள் தான் பிரான்சிஸ் டேவின் காதலி. ஆதலால் தனது காதலியின் நினைவாக மதராஸ் என பெயர் சூடியதாகவும் கூறப்படுகிறது.

இது போக இன்னோர் வரலாறு என்னவெனில், சென்னை எக்மோர் அந்த நேரத்தில் பெரிய ஆறு, அந்த ஆறுக்கும் கூவம் ஆறுக்கும் இடையில் உள்ள பகுதி சந்திரகிரி ராஜா வம்சத்தின் வசம் இருந்தது. அப்போது அந்த பகுதியை சந்திரகிரி ராஜா அரசின் கீழ் ஆண்டு வந்த நாயக்கர்தான் தர்மாலா சகோதரர்கள். இவர்களிடம்  இடத்தை வாங்க பேரம் பேசப்பட்டது. அவர்கள் இடத்தை தருகிறோம். ஆனால், எங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை வைக்க வேண்டும் என கூறினார். அதனால் அந்த பகுதியை மட்டும் சென்னா பட்டணம் என அழைத்தனர்.

பிறகு தான் இந்த இரு பகுதிகளும் ஒன்று சேர்க்கபட்டு, மதராஸ்பட்டினம் என அழைக்கப்பட்டது. அதனை வெள்ளைக்காரர்கள் மெட்ராஸ் என அழைக்க தொடங்கினர்.

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

40 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago