அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த சென்னை.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020 மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில் மக்கள் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொண்ட நகரங்கள் பிரிவில் பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை புனே மற்றும் அஹமதாபாத் நகரங்கள் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை 4-வது இடத்தை பிடித்துள்ளது.
வாழ தகுதியான நகரங்கள் பட்டியல், வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…